English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
20 Dec, 2020 | 4:13 pm
Colombo (News 1st) போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து சுமார் 5 கோடி ரூபா பணம் மற்றும் ஒரு தொகை ஹெரோயின் ஆகியன பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவின் கடுவளை, வெலிவிட்ட மற்றும் மாலம்பே பகுதிகளில் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இந்த சுற்றிவளைப்புகளின் போது பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் கடுவளை மற்றும் தலங்கம – பத்தரமுல்ல பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் 37 வயதான பெண் நுகேகொடை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.
சந்தேக நபர்களிடமிருந்து 300 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் பிரதான சந்தேக நபராக கருதப்படும் ஹேவாகம பகுதியை சேர்ந்த சந்தேக நபரிடமிருந்து 5 கோடியே 90 இலட்சம் ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
இதுவரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில், சந்தேக நபர் ஒருவரிடமிருந்து பெருந்தொகையான பணம் கைப்பற்றப்பட்டமை இதுவே முதற்தடவையாகும் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
28 Mar, 2022 | 03:12 PM
12 Apr, 2021 | 02:40 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS