நீர்வீழ்ச்சிகளை அண்மித்து வன பாதுகாப்பு திட்டம்

நீர்வீழ்ச்சிகளை அண்மித்த பகுதிகளில் வன பாதுகாப்பு திட்டம் 

by Staff Writer 20-12-2020 | 2:09 PM
Colombo (News 1st) மத்திய மலைநாட்டில் நீர்வீழ்ச்சிகளை அண்மித்த வனப்பகுதிகளில் வன பாதுகாப்பு திட்டமொன்று ஆரம்பிக்கப்படுள்ளது. இதனடிப்படையில், மலைநாட்டிலுள்ள பிரதான 5 நீர்வீழ்ச்சிகள் மற்றும் காசல்ரீ உள்ளிட்ட 03  நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. சுற்றாடல் அமைச்சினால் இந்த செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மரக்கன்றுகளை நடுதல் மற்றும் அதனை பராமரிக்கும் பணிகள், தனியார் துறையுடன் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ளன.