படைப்புழுவினால் ஏற்பட்டுள்ள சேதம் தொடர்பில் மதிப்பீடு 

படைப்புழுவினால் ஏற்பட்டுள்ள சேதம் தொடர்பில் மதிப்பீடு 

படைப்புழுவினால் ஏற்பட்டுள்ள சேதம் தொடர்பில் மதிப்பீடு 

எழுத்தாளர் Staff Writer

20 Dec, 2020 | 2:22 pm

Colombo (News 1st) படைப்புழுவினால் சோளப் பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்டுள்ள அழிவு தொடர்பில் மதிப்பீடு செய்வதற்கு விவசாய திணைக்களம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிரதேச விவசாய அதிகாரிகளுக்கும் துறைசார் அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் W.N.K. வீரகோன் தெரிவித்துள்ளார்.

இதுவரை கிடைத்த தககல்களின் பிரகாரம் சுமார் 10,000 ஹெக்டேயர் சோளச் செய்கை, படைப்புழுவினால் அழிவடைந்துள்ளதாக விவசாய திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இம்முறை பெரும்போகத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிக ஹெக்டேயர் நிலப்பரப்பில் சோளம் பயிரிடப்பட்டுள்ளது.

சோளச் செய்கைக்கு ஏற்பட்ட அழிவினை மதிப்பீடு செய்ததன் பின்னர், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அண்மையில் ஆலோசனை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்