மத்திய அதிவேக வீதி: பொத்துஹெர முதல் கலகெதர வரையான நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

by Staff Writer 19-12-2020 | 2:31 PM
Colombo (News 1st) மத்திய அதிவேக வீதியின் மூன்றாம் கட்டமான பொத்துஹெர தொடக்கம் கலகெதர வரையான பகுதியின் நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வை தொடர்ந்து நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. பொத்துஹெர தொடக்கம் கலகெதர வரை 31.07 கிலோமீட்டர் வீதி நிர்மாணிக்கப்படவுள்ளது. 4 வீதிகளைக் கொண்ட இந்த அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளை 48 மாதங்களில் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. பொத்துஹெர, பொல்கஹவெல, ரம்புக்கனை மற்றும் கலகெதர ஆகிய பகுதிகளில் 4 வீதி இடைமாறல்களூடாக மத்திய அதிவேக வீதி அமைக்கப்படவுள்ளது.

ஏனைய செய்திகள்