திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் அறுவர் கைது

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் அறுவர் களுத்துறையில் கைது

by Staff Writer 19-12-2020 | 3:16 PM
Colombo (News 1st) திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் 6 பேர் களுத்துறையில் கைது செய்யப்பட்டுள்ளனர். திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவின் தலைவரான இரத்மலானை ரொகா என்பவரின் நெருங்கிய சகாக்கள் இருவர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக களுத்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.