English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
19 Dec, 2020 | 8:07 pm
Colombo (News 1st) முல்லைத்தீவு – மல்லாவியிலுள்ள வவுனிக்குளம் வாவியில் கெப் வாகனமொன்று வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காணாமற்போயுள்ளனர்.
இன்று மாலை 4 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
2 வயது சிறுமியும் வாகன சாரதியான 37 வயதான ஆணொருவரும் காணாமற்போயுள்ளனர்.
நீரில் மூழ்கிய 12 வயதான சிறுவன் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டபோது உயிரிழந்திருந்ததாக மாங்குளம் வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கெப் வாகனத்திலிருந்த 12 வயதான மற்றுமொரு சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
காணாமற்போனவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மல்லாவி – செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர்களே காணாமற்போயுள்ளனர்.
வேகக்கட்டுப்பாட்டை இழந்ததால் கெப் வாகனம் வாவியில் வீழ்ந்து விபத்திற்குள்ளானமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
02 Feb, 2021 | 04:59 PM
23 Jan, 2021 | 05:54 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS