English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
19 Dec, 2020 | 5:59 pm
Colombo (News 1st) நத்தார், புதுவருட பண்டிகைக் காலத்தில் நாடு தழுவிய முடக்கலுக்கு இத்தாலியில் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பொது விடுமுறைக் காலங்களில், சிவப்பு வலயக் கட்டுப்பாடுகள் இத்தாலி முழுவதிலும் அமுல்படுத்தப்படவுள்ளன.
அத்தியாவசிய தேவைகள் அல்லாத வர்த்தக நிலையங்கள், உணவகங்கள் மற்றும் மதுபானசாலைகள் அனைத்தும் மூடப்படவுள்ளன.
தொழில், வைத்திய தேவைகள், அவசர காரணங்களுக்காக மாத்திரம் வீட்டை விட்டு வௌியேற பிரஜைகளுக்கு அனுமதியளிக்கப்படவுள்ளது.
மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மாத்திரம் உறவினர் வீடுகளுக்கு செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவது தொடர்பான தீர்மானம் சாதாரணமானதல்லவென இத்தாலியப் பிரதமர் Giuseppe Conte தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றினால் ஐரோப்பாவில் மிக அதிகளவான உயிரிழப்புகள் சம்பவித்த நாடாக இத்தாலி பதிவாகியுள்ளது.
67,894 மரணங்கள் அங்கு பதிவாகியுள்ளன.
13 Jan, 2021 | 12:24 PM
18 May, 2020 | 07:12 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS