136 பேருக்கு Antigen பரிசோதனை; ஒருவருக்கு தொற்று

மேல் மாகாணத்திலிருந்து வௌியேறிய 136 பேருக்கு Rapid Antigen பரிசோதனை; ஒருவருக்கு தொற்று

by Staff Writer 18-12-2020 | 8:44 PM
Colombo (News 1st) மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுபவர்களுக்கு Rapid Antigen பரிசோதனை நடத்தும் செயற்பாட்டிற்காக இன்று முதல் நாட்டின் பல பாகங்களிலும் அதற்கான வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேல் மாகாணத்திலிருந்து சப்ரகமுவ மாகாணத்திற்கு பயணிக்கும் போது அதன் எல்லைப்புறமான தங்ஓவிட்ட பகுதியில் இந்த நடமாடும் Rapid Antigen பரிசோதனை முன்னெடுக்கப்படுகிறது. தூர இடங்களுக்காக பஸ்களில் பிரயாணம் செய்யும் பயணிகள் குறித்த இடத்தில் பரிசோதனை செய்யப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். நிட்டம்புவ, மீரிகம, வேயாங்கொட பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகள், மீரிகம சுகாதார வைத்திய அதிகாரிகள் இந்தப் பணியில் ஈடுபட்டிருந்தனர். குறித்த இடத்தில் 136 பேருக்கு இன்று Rapid Antigen பரிசோதனைகள் நடத்தப்பட்டதுடன், அவர்களில் ஒருவர் COVID தொற்றுக்குள்ளானவர் என உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.