by Staff Writer 18-12-2020 | 4:29 PM
Colombo (News 1st) கொழும்பின் சில பகுதிகளில் நாளை (19) காலை 9 மணி தொடக்கம் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு -01, 02, 10, 12 ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொழும்பு 03, 04, 07, 08, 09 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் முன்னெடுக்கப்படவுள்ளது.
கொழும்பு நகருக்கான குழாய் நீர் விநியோகக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாகவே நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.