by Staff Writer 18-12-2020 | 5:32 PM
Colombo (News 1st) எங்கள் மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அத்துரலிய ரத்தன தேரர் பெயரிடப்பட்டுள்ளார்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் நேற்றைய கூட்டத்தின் போது இவரின் பெயர் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டார்.
எங்கள் மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கான வர்த்தமானியை இன்று வௌியிடவுள்ளதாகவும் அவர் கூறினார்.