English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
18 Dec, 2020 | 5:19 pm
Colombo (News 1st) மட்டக்களப்பு – தேத்தாதீவில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் வைத்தியசாலை ஊழியர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் A.C.ரிஸ்வான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்த போது இடம்பெற்ற சம்பவங்களுடன் தொடர்புடைய வைத்தியர் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்து மன்றில் ஆஜராக்குமாறு இதன்போது நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தேத்தாதீவில் கடந்த 20 ஆம் திகதி லொறி ஒன்றில் மோதி 09 வயது சிறுமி பலத்த காயமடைந்தார்.
காயமடைந்த சிறுமி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
கதிரியக்கவியலாளர்கள் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டமையால், விபத்திற்குள்ளான சிறுமிக்கு உயிர்காப்பு படங்களை பெற முடியாது போனதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் க.கலாரஞ்சனி அன்றைய தினமே ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், கதிரியக்க பிரிவினர், அன்றைய தினம் கடமையிலிருந்த வைத்தியர் உள்ளிட்ட சிலருக்கு மட்டக்களப்பு நீதவான் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளார்.
07 Jul, 2022 | 01:51 PM
12 Jun, 2022 | 05:39 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS