நாட்டின் மேலும் சில பகுதிகள் முடக்கப்பட்டன

நாட்டின் மேலும் சில பகுதிகள் முடக்கப்பட்டன

by Chandrasekaram Chandravadani 17-12-2020 | 7:40 AM
Colombo (News 1st) COVID - 19 தொற்றின் அச்சுறுத்தலை கருத்திற் கொண்டு இன்று (17) காலை 06 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் நாட்டில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக COVID - 19 வைரஸ் கட்டுப்பாட்டிற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அந்தவகையில், அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் அக்கரைப்பற்று 5 ஆம் பிரிவு, அக்கரைப்பற்று 14 ஆம் பிரிவு மற்றும் நகர்ப்பகுதி 3ஆம் பிரிவு ஆகியன முடக்கப்பட்டுள்ளன. அட்டாளைச்சேனை பொலிஸ் பிரிவில் பாலமுனை முதலாம் பிரிவு, ஒலுவில் இரண்டாம் பிரிவு மற்றும் அட்டாளைச்சேனை 8ஆம் பிரிவு ஆகிய பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. ஆலையடிவேம்பு பொலிஸ் பிரிவில் ஆலையடிவேம்பு - 8/1, ஆலையடிவேம்பு - 8/3, ஆலையடிவேம்பு - 9 ஆகிய பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளன. அத்துடன், மொனராகலை மாவட்டத்தின் அலுபொத்த கிராம சேவகர் பிரிவும் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.