785 கொரோனா நோயாளர்கள் இன்று குணமடைந்தனர்

785 கொரோனா நோயாளர்கள் இன்று குணமடைந்தனர்

by Staff Writer 16-12-2020 | 5:14 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 25,000-இற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். 785 கொரோனா நோயாளர்கள் இன்று குணமடைந்ததாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 25,652 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் இதுவரை 34 ,121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 8,312 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை, COVID -19 தொற்றுக்குள்ளானவர்களில் 157 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.