by Staff Writer 16-12-2020 | 6:15 PM
Colombo (News 1st) வெலிசறை சுவாசநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச்சென்ற கொரோனா நோயாளர் மருதானையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
மருதானையிலுள்ள வீடொன்றிலிருந்து இன்று மாலை அவர் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
குறித்த நோயாளர் மீண்டும் வெலிசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
43 வயதான இந்த நோயாளர் கடுமையாக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இவர் கிராண்ட்பாஸ் பகுதியை சேர்ந்தவராவார்.