கைதிகள் 4 பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு

மஹர கைதிகள் நால்வர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு 

by Staff Writer 16-12-2020 | 11:55 AM
Colombo (News 1st) மஹர சிறைச்சாலை கைதிகள் நால்வர் துப்பாக்கிச் சூட்டிலேயே உயிரிழந்துள்ளமை பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதேவேளை, மஹர சிறைச்சாலை அமைதியின்மையில் உயிரிழந்த 04 கைதிகளின் சடலங்களை அடக்கம் செய்வதற்கான அனுமதி வழங்குவது தொடர்பான தீர்ப்பு இன்று (16) நண்பகல் 12 மணிக்கு அறிவிக்கப்படும் என செய்தியாளர் தெரிவித்துள்ளார்.