திருகோணமலையில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி 

திருகோணமலையில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி 

by Staff Writer 16-12-2020 | 2:11 PM
Colombo (News 1st) திருகோணமலை - மொரவெவ பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மிருக வேட்டைக்காக அனுமதியின்றி பொருத்தப்பட்டிருந்த மின்கம்பியில் மோதியே இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞர் வயலுக்கு சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று பிற்பகல் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பன்குளம் - மொரவெவ பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞர் ஒருவரே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பட்டனர். விபத்து தொடர்பில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.