அநுராதபுரம் - பலல்ல கோர விபத்தில் இருவர் பலி

அநுராதபுரம் - பலல்ல கோர விபத்தில் தாயும் குழந்தையும் உயிரிழப்பு 

by Staff Writer 16-12-2020 | 7:14 AM
Colombo (News 1st) அநுராதபுரம் - பாதெனிய வீதியின் பலல்ல பகுதியில் கெப் வாகனம் ஒன்று மோதியதில் தாயும் குழந்தையும் உயிரிழந்துள்ளனர். குறித்த கெப் வாகனத்திலிருந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தலைமறைவான கெப் சாரதி உள்ளிட்ட மேலும் மூவரை கைது செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.