முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் கைது 

by Staff Writer 15-12-2020 | 10:57 AM
Colombo (News 1st) திருகோணமலை மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மொஹமட் மஹ்ரூப் உள்ளிட்ட இருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். 2015 - 2019 காலப்பகுதியில் சதொச நிறுவனத்தில் வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில், சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன  தெரிவித்தார். அப்துல்லா மொஹமட் மஹ்ரூப் உடன் மாத்தளையை சேர்ந்த ஃபாரூக் மொஹமட் அஸ்லாம் கைது செய்யப்பட்டுள்ளார்.