ஜனாஸாக்களை தகனம் செய்யும் நடைமுறைக்கு எதிர்ப்பு: கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுப்பு

by Staff Writer 15-12-2020 | 10:05 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் ஜனாஸாக்களை தகனம் செய்யும் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் சில பகுதிகளில் இன்று கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. மாத்தளை நகரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கபட்டது. சுமார் ஒரு மணித்தியாலம் அங்கு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை - காந்தி சுற்றுவட்டத்தில் கூடிய மக்கள் ஜனாஸாக்களை தகனம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். பிரதேசத்தின் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் காந்தி சுற்றுவட்டத்தில் உள்ள கம்பிகளில் வௌ்ளைத் துணிகளைக் கட்டி தமது எதிர்ப்பினை வௌியிட்டனர். தோப்பூர் நகரில் உள்ள பிரதான இடங்களில் ஜனாஸா எரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வௌ்ளைக்கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.