Eswatini பிரதமர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு

Eswatini இராச்சியத்தின் பிரதமர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு

by Chandrasekaram Chandravadani 14-12-2020 | 3:22 PM
Colombo (News 1st) தென்னாபிரிக்காவின் எஸ்வாதினி (Eswatini) இராச்சிய பிரதமர் Ambrose Dlamini கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். 52 வயதான பிரதமர் அம்ப்ரோஸ் லமினிக்கு கடந்த 04 வாரங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தென்னாபிரிக்காவிலுள்ள வைத்தியசாலையில் அவர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், உயிரிழந்துள்ளதாக துணை பிரதமர் Themba Masuku அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எஸ்வாதினி இராச்சிய பிரதமராக Ambrose Dlamini நியமிக்கப்பட்டார். 1.2 மில்லியன் சனத்தொகையை கொண்ட எஸ்வாதினி இராச்சியத்தில் இதுவரை 6,768 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 127 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.