வணிக விமான சேவைகளை ஆரம்பிக்கத் தயார் என அறிவிப்பு

வணிக விமான சேவைகளை ஆரம்பிக்கத் தயார்: சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவிப்பு

by Staff Writer 12-12-2020 | 9:57 PM
Colombo (News 1st) டிசம்பர் 26 ஆம் திகதி முதல் நாட்டில் வணிக மற்றும் விசேட விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கத் தயார் என சிவில் விமான சேவைகள் அதிகார சபை, சர்வதேச சிவில் விமான சேவை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது. அந்த வணிக மற்றும் விசேட விமான சேவைகளின் செயற்பாடுகளுக்கான வழிகாட்டல்கள் எதிர்வரும் நாட்களில் வௌியிடப்படும் என சிவில் விமான சேவைகள் அதிகார சபை வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.