கொரோனா தொற்றிலிருந்து 473 பேர் இன்று குணமடைந்தனர்

கொரோனா தொற்றிலிருந்து 473 பேர் இன்று குணமடைந்தனர்

by Staff Writer 12-12-2020 | 4:58 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டோரில் 473 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதனடிப்படையில், இலங்கையில் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 23,304 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் இதுவரை 31,375 பேர் தொற்றுடன் அடையாளங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் 7,924 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, டிசம்பர் மாதத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் வட மாகாணத்தில் 11 கொரோனா நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். யாழ், வவுனியா, மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார். இன்றைய தினமும் 300-க்கும் மேற்பட்டோருக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.