அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஐவருக்கு கொரோனா

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைத்தியர்கள் இருவர் உள்ளிட்ட ஐவருக்கு கொரோனா

by Staff Writer 12-12-2020 | 2:20 PM
Colombo (News 1st) அம்பாறை - கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இரண்டு வைத்தியர்களுக்கும் மூன்று தாதியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார். இதேவேளை, பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருடன் தொடர்புகளைப் பேணிய 11 பேரை தனிமைப்படுத்தியுள்ளதாக பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கலாநிதி I.L.M. ரிபாஸ் குறிப்பிட்டார். இதேவேளை, நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 31,375 ஆக அதிகரித்துள்ளது. COVID-19 தொற்றுக்குள்ளானவர்களில் 22 ,831 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். 8,398 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளது.