நேற்று பதிவான 538 COVID-19 தொற்றுக்குள்ளானவர்களில் 304 பேர் கொழும்பு மாவட்டத்தில் இருந்து அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 254 பேர் பொரளையை சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தில் 38 பேரும் கம்பஹாவில் 28 பேரும் களுத்துறையில் 27 பேரும் அம்பாறையில் 11பேரும் நேற்றைய தினம் பதிவாகியுள்ளனர்.
இதேவேளை முகக்கவசம் அணியாத 34 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை 1,215 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவௌியை பேணாத குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த நிலையில், பொலிஸாரினால் தொடர்ச்சியாக சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இதனிடையே, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வாழ்வோர் சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டியது அவசியமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன வலியுறுத்தினார்.