நாட்டில் இன்று 536 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் இன்று 536 பேருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 11-12-2020 | 9:51 PM
Colombo (News 1st) நாட்டில் மேலும் 536 கொரோனா நோயாளர்கள் இன்று அடையாளங்காணப்பட்டுள்ளனர். பேலியகொடை கொரோனா கொத்தணியிலிருந்து 461 பேரும் சிறைச்சாலைகளிலிருந்து 75 பேரும் இன்று அடையாளங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 31,149 ஆக உயர்வடைந்துள்ளது. இதனிடையே, COVID-19 தொற்றுக்குள்ளானவர்களில் 570 பேர் குணமடைந்துள்ளனர். அதற்கமைய, நாட்டில் குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 22,831 ஆக அதிகரித்துள்ளது. 8,172 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை 146 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.