கடமைகளை ஆரம்பிக்கும் புதிய தேர்தல்கள் ஆணைக்குழு

நிமல் புஞ்சிஹேவா தலைமையிலான புதிய தேர்தல்கள் ஆணைக்குழு கடமைகளை ஆரம்பிக்கவுள்ளது 

by Staff Writer 10-12-2020 | 7:00 AM
Colombo (News 1st) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவர் உள்ளிட்ட ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் இன்று (10) தமது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளனர். தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமல் புஞ்சிஹேவா நியமிக்கப்பட்டுள்ளார். M.M. மொஹமட், S.B. திவாரத்ன, K.P. பத்திரண மற்றும் ஜீவன் தியாகராஜா உள்ளிட்டோர் ஆணைக்குழுவின் ஏனைய அங்கத்தவர்களாவர். 20 ஆவது அரசியலமைப்பின் 41 A மற்றும் 103 முதலாம் சரத்தின் அடிப்படையில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் பெயரிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.