துன்னாலையில் காணாமற்போயிருந்தவர் சடலமாக மீட்பு

துன்னாலையில் காணாமற்போயிருந்தவர் சடலமாக மீட்பு

by Staff Writer 10-12-2020 | 2:56 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - பருத்தித்துறை, துன்னாலை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று (09) மாலை முதல் காணாமற்போயிருந்த ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரின் சடலம் மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். துன்னாலை பகுதியை சேர்ந்த 34 வயதான ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். துன்னாலை பகுதியில் வௌ்ள நீர் நிரம்பியிருந்த பகுதியிலிருந்தே சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர். சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனைய செய்திகள்