கொழும்பின் சில பகுதிகளில் 6 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் 6 மணித்தியால நீர்வெட்டு

by Bella Dalima 10-12-2020 | 2:50 PM
Colombo (News 1st) கொழும்பு 2- இன் சில பகுதிகளில் நாளை (11) இரவு தொடக்கம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. நாளை இரவு 10 மணி முதல் 6 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. டீன்ஸ் வீதி, டார்லி வீதி உள்ளிட்ட அனைத்து குறுக்கு வீதிகளிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பு -02 வோக்ஸ்ஹால் வீதி மற்றும் இப்பன்வல சந்தியிலிருந்து கொம்பனித்தெரு மற்றும் அதனுடன் தொடர்புடைய குறுக்கு வீதிகளுக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம் முன்னெடுக்கப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. இதேவேளை, கொழும்பின் சில பகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு 12, 13,14 மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. கொழும்பு 1-இல் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பத்தலேயிலிருந்து எலிஹவுஸ் நீர்த்தேக்கம் வரையான நீர்க்குழாயில் முன்னெடுக்கப்படும் திருத்தப்பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.