by Staff Writer 09-12-2020 | 1:34 PM
Colombo (News 1st) காலி - ரத்கம களப்பு பகுதியில் வௌிநாட்டு தேரர் ஒருவரின் பூதவுடல் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 3 நாட்களுக்கு முன்னர் இவர் காணாமல் போனமை தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வௌிநாட்டிலிருந்து வருகை தந்து காலி - ரத்கம பகுதியிலுள்ள தபோவனம் ஒன்றில் மத போதனையில் ஈடுபட்ட தேரர் ஒருவரின் பூதவுடலே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.