பிரசாந்தனின் விளக்கமறியல் நீடிப்பு

பிரசாந்தனின் விளக்கமறியல் நீடிப்பு

by Fazlullah Mubarak 07-12-2020 | 2:00 PM

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தனின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரை தொடர்ந்தும் 14 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் இன்று உத்தரவிட்டுள்ளார். கொரோனா தொற்று நிலைமை காரணமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பூ. பிரசாந்தன் மீதான வழக்கு இன்று இணையவழியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆரையம்பதியில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டை கொலை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த அவர் ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த வழக்கின் சாட்சியங்களை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய கடந்த மாதம் 23 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டார்.

ஏனைய செய்திகள்