சில இடங்கள் புதிதாக நாளை முதல் தனிமைப்படுத்தலில்

சில இடங்கள் புதிதாக நாளை முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன

by Fazlullah Mubarak 06-12-2020 | 7:37 PM

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பகுதிகளை நாளை அதிகாலை முதல் விடுவிக்கவும் புதிதாக சில பகுதிகளை தனிமைப்படுத்தவும் கொவிட் 19 ஒழிப்பு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் புளூமென்டல் பொலிஸ் பிரிவும் வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவின் விஜயபுர கிராம உத்தியோகத்தர் பிரிவும் நாளை அதிகாலை 5 மணி முதல் விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார் எவ்வாறாயினும் முகத்துவாரம், கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், ஆட்டுப்பட்டித்தெரு, டேம் வீதி, வாழைத்தோட்டம், மாளிகாவத்தை, தெமட்டகொட, மருதானை ஆகிய பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தபட்டிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். இதனை தவிர, கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவின் வேகந்த கிராம உத்தியோகத்தர் பிரிவும் பொரளை பொலிஸ் பிரிவின் வணாத்தமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவும் வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவின் சாலமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. மட்டக்குளி பொலிஸ் பிரிவிலுள்ள ரன்திய உயன வீட்டுத்திட்டம், பர்கியூஸன் வீதியின் தென்பகுதி ஆகியனவும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக நீடிக்கும் என கொவிட் 19 ஒழிப்பு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தின் கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவிலுள்ள ஹூணுப்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவும் கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவிலுள்ள 60 ஆம் தோட்டம் மற்றும் வௌ்ளவத்தை கோகிலா ஒழுங்கை பகுதியும் நாளை அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன. கம்பஹா மாவட்டத்தின் களனி பொலிஸ் பிரிவு நாளை காலை 5 மணியிலிருந்து தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளது வத்தளை, பேலியகொடை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் சில கிராம உத்தியோத்தர் பிரிவுகளை தவிர ஏனைய பகுதிகள் நாளை விடுவிக்கப்படவுள்ளன. இதற்கமைய, வத்தளை பொலிஸ் பிரிவின், கெரவலப்பிட்டிய ஹேக்கித்த, குருந்துஹேன, எவரிவத்த, வெலிக்கடமுல்ல ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. பேலியகொடை பொலிஸ் பிரிவின் பேலியகொடவத்த, பேலியகொடை கங்கபட, மீகஹவத்த, பட்டிய வடக்கு, ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் நாளை அதிகாலை முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன. கிரிபத்கொ​டை பொலிஸ் பிரிவின், வெலேகொட வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவும் நாளை அதிகாலை 5 முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக கொவிட் 19 ஒழிப்பு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத்தளதி லெப்டினன் ஜெரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள ஏனைய மாவட்டங்களில் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் எனவும் இராணுவத்தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.