​​சோமாலியாவிலுள்ள படையினரை மீள அழைக்க தீர்மானம்

​​சோமாலியாவிலிருந்து படையினரை மீள அழைக்க ட்ரம்ப் தீர்மானம் 

by Staff Writer 05-12-2020 | 11:27 AM
Colombo (News 1st) சோமாலியாவிலிருந்து அமெரிக்க படையினரை மீள அழைப்பதற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார். எதிர்வரும் ஜனவரி மாதம் 15 ஆம் திகதியன்று சோமாலியாவிலிருந்து படையினரை வௌியேற்றுமாறு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது. சோமாலியாவில் அல் ஷபாப் அமைப்பினருக்கு எதிராக இடம்பெற்றுவரும் உள்நாட்டு மோதலில், அரச படையினருக்கு ஆதரவாக 700 அமெரிக்க படையினர்   செயற்பட்டு வந்தனர். இந்தநிலையில், இவர்களில் சிலர் ஏனைய சில அண்மைய நாடுகளுக்கு எல்லை பாதுகாப்பிற்காக அனுப்பப்படவுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது.