மொரட்டுவை வாகன விபத்தில் 2 சிறுமிகள் உயிரிழப்பு

மொரட்டுவை வாகன விபத்தில் 2 சிறுமிகள் உயிரிழப்பு ; கர்ப்பிணி தாயொருவர் படுகாயம் 

by Staff Writer 05-12-2020 | 1:24 PM
Colombo (News 1st) கொழும்பு - காலி வீதியில் மொரட்டுவை எகொடஉயன பகுதியில் பாதசாரிகள் கடவையில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு சிறு பிள்ளைகள் உயிரிழந்துள்ளதுடன், கர்ப்பிணி தாயொருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிள் மோதி நேற்றிரவு விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் கூறினர். விபத்தின் போது பலத்த காயமடைந்த நிலையில் கர்ப்பிணி தாயும் இரண்டு பிள்ளைகளும் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது சிறுபிள்ளைகள் இருவரும் உயிரிழந்துள்ளனர். பலத்த காஅமடைந்த கர்ப்பிணி தாய் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மொரட்டுவை கட்டுகுருந்த பகுதியை சேர்ந்த ஒரு வயது மற்றும் 07 வயது பெண் பிள்ளைகளே விபத்தில் உயிரிழந்துள்ளனர். விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.