மஹர: உயிரிழந்தோரில் 2 பேர் அடையாளம் காணப்பட்டனர்

மஹர சிறைக் கலவரத்தில் உயிரிழந்தோரில் இருவர் அடையாளம் காணப்பட்டனர் 

by Staff Writer 05-12-2020 | 11:23 AM
Colombo (News 1st) மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தின் போது உயிரிழந்தவர்களில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 31 மற்றும் 39 வயதான ஜா - எல களுபாலம மற்றும் வத்தளை - உனுபிட்டிய ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களின் சடலங்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார். சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் இந்த விசாரணைகளுக்கு 08 உத்தியோகத்தர்கள் மேலதிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையிலான 20 பேர் கொண்ட குழுவினரால் நேற்றைய தினம் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.