புலமைப்பரிசில் எழுதிய மாணவர்களுக்கான அறிவித்தல் 

புலமைப்பரிசில் எழுதிய மாணவர்களுக்கான அறிவித்தல் 

by Staff Writer 05-12-2020 | 12:58 PM
Colombo (News 1st) ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, ஆறாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. உரிய முறையில் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை தரம் 05 புலமைப்பரிசில் பரீடசைக்கு தோற்றிய பாடசாலைகளின் அதிபர்களிடம் கையளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் மற்றும் அதற்கான ஆலோசனை கோவைகளை பாடசாலை அதிபர்களிடம் பெற்றுக் கொள்ள முடியும். கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கான விண்ணப்பங்களை, சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய கையேற்குமாறு அதிபர்கள் மற்றும் வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.