by Staff Writer 05-12-2020 | 2:02 PM
Colombo (News 1st) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வௌியேறும் பகுதியிலுள்ள ஓய்வுப்பிரிவு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மீள திறக்கப்பட்டுள்ளது.
இன்று (05) முற்பகல் 09 மணி தொடக்கம் இந்த பகுதி திறக்கப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கடமைநேர முகாமையாளர் குறிப்பிட்டார்.
அதற்கமைய பயணி ஒருவருக்கு மற்றுமொருவரை வௌியேறும் பகுதிக்கு அழைத்துச் செல்ல முடியும் என அவர் கூறினார்.
சுகாதார தரப்பினரால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு அமைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்தார்.