by Staff Writer 04-12-2020 | 9:38 AM
Colombo (News 1st) மஹர சிறைச்சாலையின் அனைத்து கைதிகளையும் கொரோனா அன்டிஜன் (Antigen) பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளை வார இறுதியில் முன்னெடுக்கவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கூறியுள்ளார்.
மஹர சிறைச்சாலையில் தற்போது 2,800 இற்கும் அதிக கைதிகள் உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
இதுவரை 1,382 கைதிகளுக்கு COVID - 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.