சூறாவளியின் போது காணாமல் போன மீனவரின் சடலம் கரையொதுங்கியது 

by Staff Writer 04-12-2020 | 10:19 AM
Colombo (News 1st) சீரற்ற வானிலையின் போது கடற்றொழிலில் ஈடுபட்டு காணால் போன ஒருவரின் சடலம் யாழ்ப்பாணம் - காரைநகர், ஊரி பகுதியில் கரையொதுங்கியுள்ளது. 38 வயதான ஒருவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது. சுழிபுரம் - பெரியபுலோவை சேர்ந்த குறித்த நபர் பொன்னாலை கடற்பகுதியில் இறால் பிடிக்கச்சென்ற போது நேற்று முன்தினம் காணாமல் போனதாக பொலிஸார் கூறினர். சடலம் தொடர்பில் நீதவான் விசாரணை இடம்பெற்றதன் பின்னர் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.