அனர்த்தத்தில் சிக்கி ஒருவர் காணாமல் போயுள்ளார்

Burevi சூறாவளி அனர்த்தத்தில் சிக்கி ஒருவர் காணாமல் போயுள்ளார் 

by Staff Writer 03-12-2020 | 2:34 PM
Colombo (News 1st) Burevi சூறாவளி காரணமாக 12,252 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதன்போது ஒருவர் காணாமல் போயுள்ளதோடு, நால்வர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேநேரம், 15 வீடுகள் முற்றாகவும் 192 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.