by Staff Writer 03-12-2020 | 3:42 PM
Colombo (News 1st) கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் காங்கேசன்துறையூடாக திருகோணமலை வரையிலான ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என மீனவர்கள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏனைய கடற்பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபடுவோரை மிகவும் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.