English
සිංහල
எழுத்தாளர் Chandrasekaram Chandravadani
02 Dec, 2020 | 1:15 pm
Colombo (News 1st) Burevi சூறாவளியானது திருகோணமலைக்கு கிழக்கு – தென் கிழக்கு திசையில் 200 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.
திருகோணமலைக்கும் பருத்தித்துறைக்கும் இடைப்பட்ட பகுதியூடாக முல்லைத்தீவுக்கு அண்மித்த பகுதியில் இன்று (02.12.2020) இரவு 7 – 10 மணி வரையான காலப் பகுதிக்குள் பிரவேசிக்கும் என வானிலை ஆய்வு மையத்தினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
75 – 85 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காற்று பலமடைந்து 95 கிலோமீற்றர் வேகம் வரை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக எதிர்வுகூறப்படுகின்றது.
வடக்கு, வட மேல் மாகாணங்களின் சில பகுதிகளில் 150 மில்லிமீற்றர் வரையான மழை வீழ்ச்சி பதிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, கிழக்கு, வட மத்திய, மத்திய, மேல், மற்றும் சபரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
Burevi சூறாவளி இன்றிரவு 7 – 10 மணி வரையான காலப்பகுதியில் நாட்டை ஊடறுத்து செல்லும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
12 Jan, 2021 | 01:13 PM
24 Dec, 2020 | 10:09 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS