மஹர சிறை அமைதியின்மை: உயிரிழந்த 9 பேருக்கு கொரோனா

மஹர சிறைச்சாலை அமைதியின்மையில் உயிரிழந்த 9 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி 

by Staff Writer 02-12-2020 | 9:16 AM
Colombo (News 1st) மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையினால் உயிரிழந்தவர்களில் 09 கைதிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் ஊடாக இது உறுதி செய்யப்பட்டதாக ராகமை வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். மஹர சிறைச்சாலை அமைதியின்மையினால் 11 கைதிகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.