English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
02 Dec, 2020 | 4:23 pm
Colombo (News 1st) Pfizer/BioNTech கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை பிரித்தானியா முதல் நாடாக அங்கீகரித்துள்ளது.
COVID – 19 தொற்றிலிருந்து 95 வீதம் பாதுகாப்பளிக்கும் இந்த தடுப்பு மருந்து பிரித்தானியாவில் அடுத்த வாரம் முதல் பாவனைக்கு வருவதாக அந்நாட்டு ஔடக ஒழுங்குபடுத்துநரான MHRA நிறுவனம் தெரிவித்துள்ளது.
அடுத்த வாரம் முதல் பிரித்தானியாவில் 8 இலட்சம் தடுப்பு மருந்து தொகுதிகள் பயன்பாட்டுக்கு வரும் என சுகாதார செயலாளர் Matt Hancock தெரிவித்துள்ளார்.
தேசிய சுகாதார சேவையினால் தொடர்புகொள்ளப்படும் வரை பொதுமக்கள் காத்திருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
காப்பகங்களிலுள்ள வயது முதிர்ந்தவர்கள் உள்ளிட்ட அவசிய தேவையுடையோருக்கு சில நாட்களில் நோய்த்தடுப்பு மருந்து வழங்கப்படவுள்ளது.
20 மில்லியன் மக்கள் பயன்பெறக்கூடிய வகையில் 20 மில்லியன் தடுப்பு மருந்து தொகுதிகளை பிரித்தானியா ஏற்கனவே கொள்வனவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
Pfizer-BioNTech மற்றும் அமெரிக்காவின் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனமான மொடர்னாவின் COVID – 19 தடுப்பு மருந்து என்பன 90 வீதம் பலனளிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.
23 Jan, 2021 | 03:12 PM
21 Jan, 2021 | 11:07 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS