நாட்டில் மேலும் 268 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் மேலும் 268 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

by Staff Writer 01-12-2020 | 6:36 PM
Colombo (News 1st) COVID - 19 தொற்றுக்குள்ளான மேலும் 268 பேர் இன்று (01) அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் 24,255 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 6,320 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 257 பேர் இன்று குணமடைந்துள்ளனர். அதற்கமைய நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 17,817 ஆக அதிகரித்துள்ளது இலங்கையில் இதுவரை 118 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.