கொலன்னாவ தபால் அலுவலகங்களுக்கு பூட்டு

கொலன்னாவ Post Office மற்றும் உப தபால் அலுவலகங்களுக்கு பூட்டு

by Staff Writer 01-12-2020 | 5:29 PM
Colombo (News 1st) கொலன்னாவ தபால் அலுவலகம் மற்றும் அதனூடாக நிர்வகிக்கப்படும் 06 உப தபாலகங்கள் ஆகியன மூடப்பட்டுள்ளன. தபால் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித்த ரணசிங்க குறிப்பிட்டுள்ளார். கொலன்னாவ தபால் நிலையத்தின் ஏனைய ஊழியர்களுக்கும் PCR பரிசோதனையை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.