by Staff Writer 30-11-2020 | 12:13 PM
Colombo (News 1st) மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்வடைந்துள்ளதுடன், காயமடைந்த கைதிகள் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.
காயமடைந்தவர்களில் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் இருவரும் அடங்குவதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.