தீபமேற்றியதற்காக கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர் விடுவிப்பு

by Bella Dalima 30-11-2020 | 7:57 PM
Colombo (News 1st) யாழ். பல்கலைக்கழக வளாகத்திலிருந்து நேற்றிரவு பொலிஸாரால் அழைத்துச்செல்லப்பட்ட மாணவர் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். திருக்கார்த்திகை திருநாளான நேற்றைய தினம் (29), யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கார்த்திகை தீபமேற்றுவதற்கு மாணவர்கள் திட்டமிட்டிருந்தனர். பல்கலைக்கழக வளாகத்திலுள்ள பரமேஸ்வரன் ஆலயத்திற்கு எதிரேயுள்ள வாயிலில் மாணவரொவருவர் கார்த்திகை தீபம் ஏற்றினார். தீபமேற்றிய மாணவரை கோப்பாய் பொலிஸார் அழைத்துச்சென்றனர். பல்கலைக்கழக வளாகத்தினுள் செல்லும் வாயில்கள் மூடப்பட்டதால், பரமேஸ்வரன் ஆலயத்தில் தீபம் ஏற்ற முடியாத நிலையில் பண்பாட்டு வாயிலின் வெளியே தீபங்களை ஏற்ற மாணவர்கள் முற்பட்டிருந்தனர். மாவீரர் தின அனுஷ்டிப்பிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சுடரேற்றுவதற்கு மாணவர்கள் முயற்சிப்பதாகக் கிடைத்த தகவலுக்கமைய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு கூறியது. எனினும், வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர் மாணவர் விடுவிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டது. மாணவர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதை அடுத்து, மாணவர்கள், சட்டத்தரணி மணிவண்ணன் உள்ளிட்டோர் அங்கு சென்றிருந்தனர். தீபமேற்றுவது இந்துக்களின் வழிபாடு என தௌிவூட்டியதன் பின்னர் அம்மாணவர் விடுவிக்கப்பட்டதாக சட்டத்தரணி வி.மணிவண்ணன் கூறினார்.

ஏனைய செய்திகள்