by Bella Dalima 29-11-2020 | 2:50 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வௌிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 372 பேர் நாடு திரும்பியுள்ளனர்.
அவர்களில் 292 பேர் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்ததாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கடமைநேர முகாமையாளர் குறிப்பிட்டார்.
அவுஸ்திரேலியாவிலிருந்து 4 பேரும் கட்டாரிலிருந்து 7 பேரும் இன்று நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
மாலைத்தீவிலிருந்து 69 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
நாட்டை வந்தடைந்துள்ள அனைவருக்கும் PCR சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் அங்கிருந்து தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கடமைநேர முகாமையாளர் தெரிவித்தார்.