மஹர சிறைச்சாலைக்குள் அமைதியின்மை; கைதி ஒருவர் உயிரிழப்பு

by Bella Dalima 29-11-2020 | 7:02 PM
Colombo (News 1st) மஹர சிறைச்சாலைக்குள் இருந்து கைதிகள் சிலர் தப்பிச்செல்ல முயற்சித்த போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இதனால், நிலைமையைக் கட்டுப்படுத்த சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். இதன்போது, இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் சிறைக்கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மூவர் காயமடைந்துள்ளதாகவும் அஜித் ரோஹன கூறினார். மஹர சிறைச்சாலை வளாகத்தில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.