600 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு

600 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு

by Staff Writer 28-11-2020 | 12:43 PM
Colombo (News 1st) கொரோனா தொற்று காரணமாக சிறைக் கைதிகள் சிலருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், சிறைக்கைதிகள் சுமார் 600 பேருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார். எவ்வாறாயினும், பாரதூரமான குற்றங்களுடன் தொடர்புடைய சிறைக்கைதிகள் எவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படவில்லை எனவும் அவர் கூறினார். விடுதலை செய்யப்படவுள்ள சிறைக்கைதிகளின் பெயர் விபரங்களை உடனடியாக தலைமையகத்திற்கு அனுப்புமாறு அனைத்து சிறைச்சாலைகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்தார். எதிர்வரும் இரண்டு நாட்களில் பொது மன்னிப்பு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.